திருச்சி, டிச.4: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னதுரை தலைமையில் விவசாயிகள் கருப்பு கொடியுடன் நேற்று காவிரி ஆற்று பாலத்தில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் பிரதமர் மோடி உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தலைமையில் விரைந்து சென்ற போலீசார் விவசாயி சின்னதுரை உள்ளிட்ட 10 பேரை கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.