கலை இலக்கிய போட்டியில் வென்ற அம்பை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அம்பை, டிச.4:  பாரதியார் நினைவு விழாவையொட்டி வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே கலை இலக்கிய போட்டி விகேபுரம் வெல்பர் பள்ளியில் நடந்தது. இதில் அம்பை வட்டார பகுதியை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்ற அம்பை லட்சுமி வித்யா நிகேதன் பள்ளி மாணவி பிரீத்தி கவிதை போட்டியில் முதலாம் இடத்தையும் ஐஸ்வர்யா பொன்ரோஜா 2ம் இடத்தையும் ஓவிய போட்டியில் வேணுகோகுல் 2ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.  சாதனை படைத்த மாணவர்களுக்கு அம்பை லெட்சுமி நிகேதன் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகி டாக்டர் லெட்சுமி அம்மாள் தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கி பேசினார். செயலாளர் டாக்டர் சிவபாலன், நிர்வாககுழு உறுப்பினர் திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முதல்வர் அர்ச்சனா வரவேற்றார். சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் சக மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழத்துக்களை தெரிவித்தனர்.

Related Stories: