முஷ்ணம், நவ. 29: ஆன்லைன் மூலம் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரை செய்யாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் ஒரே அரசாணை மூலம் வழங்க வேண்டும். பணியிடங்களை மறுசீரமைப்பு, அலுவலகத்தில் அடிப்படை வசதி, கணினி வழி சான்று வழங்கும் செலவு தொகையை வழங்க வேண்டும். இ-அடங்கலை கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.