நாகர்கோவில், நவ.28: மத்திய அரசால் நவம்பர் 16ம் தேதி முதல் 30ம்தேதி வரை இரண்டு வாரங்கள் ஸ்வச் பாரத் பத்வாடா நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையில் சிறப்பான சுற்றுச்சூழல் மற்றும் சுத்தமான காற்றுக்காக மரம் நடுவிழா நடைபெற்றது. இதில் உதவி கோட்ட கண்காணிப்பாளர் துரை மற்றும் தபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.