அரசு பள்ளி மாணவிக்கு இளம் படைப்பாளர் விருது

ஆத்தூர்,நவ.27: சேலம் போஸ் மைதானத்தில் சில தினங்களுக்கு முன் புத்தக திருவிழா நடைபெற்றது. இதில் நடந்த பேச்சுப்போட்டியில் ஆத்தூர் தாலுகா தென்னங்குடிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவி சரண்யா, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அந்த மாணவிக்கு, பொது நூலகத்துறை சார்பில் இளம் படைப்பாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை பெற்ற மாணவியை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

Related Stories: