வர்த்தக சங்கம் கோரிக்கை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயி.சண்முகம்பிள்ளை ஜூவல்லர்ஸ் நிவாரண உதவி

புதுக்கோட்டை, நவ.27: கடந்த 16ம் தேதி கஜா புயல் தாக்கத்தினால் 7 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தென்னை, மா, பலா, தேக்கு, முந்திரி வாழை உள்ளிட்டவைகள் மட்டுமின்றி மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் 10 நாட்களுக்கு மேலாக மின்சாரம், குடிநீர், உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் துயரத்தை போக்க புதுக்கோட்டை வயி.சண்முகம்பிள்ளை ஜுவல்லர்ஸ் சார்பில் புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்கட்டமாக அரிசி உள்ளிட்ட அத்தியாசவசிய பொருட்களை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகை கடை மேலாளர் சுந்தர் மற்றும் அதிமுக நகர செயலாளர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிவாரண பொருட்களை வயி.சண்முகம்பிள்ளை ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் ராகுல்வெங்கடாசலம் பொறந்த ஊருக்கு பெருமை சேர் அமைப்பிடம் வழங்கினார். அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

Related Stories: