நாகர்கோவில், நவ. 23: ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை கவனிப்பவர்கள் தங்க ரூ.1 கோடியில் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் இன்னும் சில நாட்களில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்ட உள்நோயாகிகள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இங்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சைப்பெற்று செல்கின்றனர். மேலும் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சைப்பெற்றுகின்றனர். உள்நோயாளிகளாக சிகிச்சைப்பெற்று வரும் பல நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து அவர்களை கவனித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் நோயாளிகளின் அறைக்குள் அவர்களது உறவினர்களை அனுமதிப்பது இல்லை. இதனால் இரவு நேரங்களில் மருத்துவமனையின் வராண்டாவில் உறவினர்கள் தங்கி வந்தனர். இதனால் நோயாளிகளின் உறவினர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து நோயாளிகளுடன் இருந்து கவனிக்கும் அவர்களது உறவினர்களுக்கு மருத்துவமனையில் தங்கும் வசதி செய்துகொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.