பெரம்பலூர்,நவ.22: மழைக்காக விசுவக்குடி அணையில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ளது அன்னமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் அரசலூர், விசுவக்குடி, ஈச்சங்காடு, முகமதுபட்டிணம், பிள்ளையார்பாளையம் ஆகிய கிளை கிராமங்கள் உள்ளன. இப்பகுதி கிராமங்களின் விவசாயத்திற்காகத்தான் விசுவக்குடி அருகே பச்சைமலை, செம்மலை ஆகிய இரு மலைக்குன்றுகளை இணைத்து ரூ33.07 கோடியில் அணை கட்டப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையின்போது நிரம்பிய அணை நீர்பாசனத்திற்கு பயன்படுத்தாமலேயே வற்றிப்போனது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையாக பெய்த மழைநீரும் சிறிதளவு திறந்து விட்டும் பாசனத்திற்கு பயனில்லை.