சூர்யலிங்கேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

சேலம், நவ.22: சேலம் அருகே பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு அருகே நந்தி மலை மீதுள்ள  கற்பகாம்பாள் உடனமர் சூரியலிங்கேஸ்வர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை(23ம் தேதி) நடைபெறுகிறது. அன்று காலை 7 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பின்னர், அண்ணாமலை தீபம், வைகாசன தீபம், பஞ்ச தீபம் ஏற்றப்பட்டு பஞ்ச மூர்த்தங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மதியம் 2 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்படுகிறது. மாலை 5 மணிக்கு திருக்கார்த்திகை தீபத்திற்கு தேவையான பொருட்கள் நந்தி மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் திருக்கார்த்திகை அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது.

Related Stories: