பூந்தமல்லி, நவ. 22: ஆட்டோ டிரைவர் கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். வருமானம் பாதித்ததால் அவரை வெட்டிக்கொன்றதாக சக ஆட்டோ டிரைவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது. பூந்தமல்லி அருகே பாரிவாக்கம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சத்தியகிரி ராவ் (30). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி பிரியா (26), லோகேஷ் (5), சர்வேஷ் (3) மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சத்தியகிரி ராவ், ஆவடி ஆட்டோ ஸ்டாண்ட் சங்க செயலாளராக இருந்துள்ளார். இவர் ஸ்டாண்டில் உள்ள மற்ற ஆட்டோ டிரைவர்களுடன் அடிதடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவர் மீது சோழவரம், அயனாவரம் காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர் பூந்தமல்லி போலீசில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் பாரிவாக்கம், கங்கை அம்மன் கோயில் குளம் அருகே தனது நண்பர்களுடன் சத்தியகிரி ராவ் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு ஆட்டோவில் வந்த 7 பேர் கும்பல் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பிச் சென்றது.