திருச்சி, நவ.21: திருச்சி சிறையில் கைதிகளுக்கு எய்ட்ஸ், காசநோய் உள்ளதா என கண்டறிய சோதனைக்கூட வாகனத்தை கலெக்டர் ராஜாமணி துவக்கி வைத்தார். தேசிய காசநோய் ஒழிப்பு மையம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் இணைந்து மாவட்டத்தில் உள்ள சிறைகைதிகளுக்கு எய்ட்ஸ், டி.பி. நோய் உள்ளதா என கண்டறிய சோதனைக்கூட வாகனம் துவக்க விழா நடைபெற்றது. வாகனத்தை துவக்கி வைத்து கலெக்டர் ராஜாமணி தெரிவித்ததாவது: திருச்சி மாவட்டத்தில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு எய்ட்ஸ், டி.பி. உள்ளதா என டிசம்பர் 1வரை அந்தந்த சிறைசாலைகளுக்கு சென்று பரிசோதனை செய்யப்படவுள்ளது. மத்திய சிறைச்சாலையில் வருகிற 27ம் தேதி வரை கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.