மர்ம காய்ச்சலுக்கு மூதாட்டி பலி

திண்டுக்கல், நவ. 20:  திண்டுக்கல் கோபால்நகரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி பெருமாளம்மாள் (75). இவர் கடந்த 3 நாட்களாக காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் குறையாமல் இருந்ததால் நேற்று காலை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாலையில் பெருமாளம்மாள் உயிரிழந்தார்.

Related Stories: