நெல்லை, நவ.19: நெல்லை டவுனில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் நில வேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டவுன் 44வது வார்டில் நடந்த நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ெபான்னையா பாண்டியன் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். இதில் மாநகர வர்த்தக அணி மைதீன்மல்கர், மாநகர பிரதிநிதி காசிமணி, குண்டுபாண்டியன், ரெங்கா கண்ணன், ஐயாசாமி பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் மகாராஜன், முத்து மாரியப்பன், கிறிஸ்டோபர், சரவணன், கருணாநிதி, நியாஸ், ஜாகீர் உசேன், சேக்அப்துல்லா, வேலாயுதம் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இளைஞரணி சாதிக் பாட்சா செய்திருந்தார்.