நெல்லையில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

நெல்லை, நவ.19:  நெல்லை டவுனில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் நில வேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டவுன் 44வது வார்டில் நடந்த நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ெபான்னையா பாண்டியன் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். இதில் மாநகர வர்த்தக அணி மைதீன்மல்கர், மாநகர பிரதிநிதி காசிமணி, குண்டுபாண்டியன், ரெங்கா கண்ணன், ஐயாசாமி பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் மகாராஜன், முத்து மாரியப்பன், கிறிஸ்டோபர், சரவணன், கருணாநிதி, நியாஸ், ஜாகீர் உசேன், சேக்அப்துல்லா, வேலாயுதம் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இளைஞரணி சாதிக் பாட்சா செய்திருந்தார்.

இதுபோல் நெல்லை டவுன் சந்திபிள்ளையார் கோயில் அருகே திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில், டிபிஎம் மைதீன்கான் எம்எல்ஏ முன்னிலையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் வின்சர், மத்திய மாவட்ட பொருளாளர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் பூக்கடை அண்ணாதுரை, அப்துல்ஹயூம், மற்றும் டாக்டர் பொன்னுமணி, சரவணன், காஜாமைதீன், பேச்சாளர் முத்தையா, ஸ்டீபன், வெங்கடேஷ், மணிகண்டன், பஷீர், திராவிட மணி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெல்லை பகுதி செயலாளர் கோபி என்ற நமசிவாயம், மலைகண்ணன் செய்திருந்தனர்.

Related Stories: