பள்ளி மாணவர் தற்கொலை

நெல்லை, நவ.19:  பாளை கேடிசி நகர் மீனாட்சிசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் தினகரன் மகன் சூரியபாலன்(16). பாளையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் செலவுக்கு பணம் கேட்டதாகவும், பணம் கிடைக்கவில்லை என்ற நிலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. பாளை தாலுகா போலீசார் உடலை கைபற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories: