நெல்லையில் நேஷனல் பேந்தர்ஸ் கட்சி கூட்டம்

நெல்லை, நவ.19: ஜம்மு காஷ்மீர் நேஷனல் பேந்தர்ஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லத்துரை, மாவட்ட செயலாளர் சிவசங்கர், மாநகர் மாவட்ட தலைவர் மாரியப்பன், மாநில இளைஞர் அணி செயலாளர் சூசை, விவசாய அணி தலைவர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் அதிகாரிகள் நேரடியாக சென்று குறைகளை கேட்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: