குளித்தலை அரசு பெண்கள் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

குளித்தலை நவ.15:  கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு குளித்தலை வட்டசட்ட பணிகள் குழு சார்பில் குழந்தைகள் தினவிழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு குளித்தலை சார்பு நீதிபதி தங்கவேல், தலைமையேற்று சட்ட விழிப்புணர்வு குறித்த கையேடை மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.தலைமை ஆசிரியை  மஞ்சுளா வரவேற்றார். கிராமியம் இயக்குநர் நாராயணன், மக்கள் நீதிமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல் சங்க தலைவர் சாகுல்அமீது, செயலாளர் நாகராஜன், அரசு வக்கீல்கள் மூர்த்தி, மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் டேவிட் மனோகரன் நன்றி கூறினார்.

Related Stories: