என்.புதூர் அரசு பள்ளியில் குழந்தைகள் தினவிழா

கரூர்,நவ.15: கரூர் என்.புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. தலைமையாசிரியர் வள்ளிராசன் தலைமை வகித்தார். தமிழாசிரியை சாந்தி வரவேற்றார். லயன்ஸ் மண்டலதலைவர் மேலைபழனியப்பன் பேசினார். மரக்கன்றுகள் நட்டும் பள்ளிக்கு திருக்குறள் நூல்கள்,பேனா வழங்கினார். தேர்வெழுதி பட்டம் பெறும் கல்வி மட்டும் சிறந்த கல்வியாகாது. உடல் உழைப்பு மட்டுமே உயர்வினைக்கொடுக்கும். படிக்கும்போதே ஏதாவது வேலையும் கற்றுக்கொண்டு வாழ்வாதாரத்தை உறுதிசெய்துகொள்ளவேண்டும் என்றார். கவிதா நன்றி கூறினார்.

Related Stories: