பழநி, நவ. 15:பழநி அருகே தாளையூத்து சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறையின் சார்பில் தொடர்புமொழி குறித்த கருத்தரங்கம் நடந்தது. கல்லூரியின் தலைவர் ஜெயலட்சுமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் சுப்பிரமணி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் தேவகி வரவேற்றார். எஸ்ஆர்கேஎஸ் அகாடமி நிர்வாகி சண்முகநாதன் தொடர்பு மொழியின் பயன்கள் மற்றும் நன்மைகள் குறித்து சிறப்புரையாற்றினார். மாணவி கவிதா நன்றி கூறினார்.