ஜெயங்கொண்டம், நவ. 14: கோவையில் மாநில அளவில் தேசிய அறிவியல் குழந்தைகள் 26வது மாநாடு நடந்தது. இதில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவில் 6 மாணவர்கள் மாநில அளவில் சாதனை புரிந்து குழந்தை விஞ்ஞானி
விருது பெற்றனர். கழிவில் இருந்து செல்வம் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மான்ஸ்ரீ, சுப்ரியா, சமூக மக்களின் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அகமது இப்ராஹிம், ரேணுகாதேவி, சுற்றுச்சூழலை புதுப்பித்தல் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட சூரியமணல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சந்தோஷ்குமார், சந்தோஷ் ஆகியோர் குழந்தை விஞ்ஞானி விருது பெற்றனர்.