ஓராண்டாக காலியாக இருந்தது வி.ேக.புரத்தில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

வி.கே.புரம், நவ. 14:  வி.கே.புரம் காவல் நிலையத்தில் ஓராண்டுக்கு பிறகு புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார். வி.கே.புரம்  காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டாக இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்தது. கடந்தாண்டு அக்டோபரில் இன்ஸ்பெக்டர் சைரஸ் மாற்றப்பட்டு மதிவாணன் பொறுப்பேற்றார். அவர், ஒரு மாதத்திற்குள்  மணிமுத்தாறு பட்டாலியனுக்கு பொறுப்பு அதிகாரியாக மாற்றபட்டார். தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக மதிவாணன் பணி நீக்கம்  செய்யப்பட்டார். இதனால் வி.கே.புரம் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர்  பணியிடம் காலியாக இருந்து வந்தது. இதுகுறித்து தினகரனிலும் செய்தி வெளியானது. இந்நிலையில் ஓராண்டுக்கு பிறகு வி.கே.புரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக ராஜகுமாரி அறிவிக்கப்பட்டார். அவர், நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related Stories: