வி.கே.புரம், நவ. 14: பாபநாசத்தில் குடிபோதையில் வாலிபர் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். 2 வேன்கள் சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டம் அம்மையார்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், தனது மகன் சக்திமாரிக்கு திதி கொடுப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வேனில் பாபநாசத்துக்கு வந்தார். கோயில் மேற்புறத்தில் வேனை நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினர். அப்போது அவ்வழியாக தாறுமாறாக வந்த கார், இவர்கள் மீது மோதியதுடன், அருகில் நின்றிருந்த 2 வேன்கள் மீதும் மோதிவிட்டு நின்றது. இச்சம்பவத்தில் கிருஷ்ணசாமி மனைவி கிருஷ்ணம்மாள் (45), மகன் பிரகலதாபன் (11) மற்றும் இதே ஊரை சேர்ந்த சந்திரன் மனைவி ஜக்கம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.