கடையம், நவ. 14: கடையம் அருகே கேரளாவில் இருந்து மர்மமான முறையில் சடலத்தை கொண்டு வந்து புதைத்த இடத்தில் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கடையம் அருகே முதலியார்பட்டி ரயில்வே கேட் தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன் (53). இவருக்கு திருமலையப்பபுரம் விலக்கில் இருந்து கேளையாபிள்ளையூர் செல்லும் சாலையோரத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவரது மைத்துனர் ஆயத்துல்லா பராமரித்து வருகிறார். இந்த நிலத்தில் கடந்த 8ம் தேதி கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் பொட்டல்புதூர் மெயின்ரோட்டை சேர்ந்த சேக் உதுமான் மகன் கலிலுர் ரகுமான் மற்றும் 5 பேர் சேர்ந்து அத்துமீறி நுழைந்து மர்மமான சடலத்தை சட்டவிரோதமாக புதைத்தனர்.