பெரம்பலூர், நவ.2: பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியம், சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது. சிக்கனமும், சேமிப்பும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. சிக்கனமாக வாழ்ந்தால் தான் சேமிக்க இயலும். சேமித்தால் தான் மனிதனின் நிகழ்கால தேவை மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து அவர்களது சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.