திருச்சி,நவ.1: திருச்சி அருகே டாஸ்மாக் ஊழியர்களை வழிமறித்து கண்ணில் மிளகாய்பொடி தூவி ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி-தோகைமலை ரோடு தாயனூர் வாழை ஆராய்ச்சி மையம் அருகே அரியாவூர் ஒத்தக்கடை பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. முசிறியை சேர்ந்த திரவியம் மேற்பார்வையாளராகவும், தமிழரசன், குணசேகரன், மணி ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் விற்பனை முடிந்த பின் கடையை மூடிவிட்டு வசூலான ரூ.1.70 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஊழியர்கள் 3 பேர் ஒரே பைக்கில் திருச்சி நோக்கி சென்றனர். வாழை ஆராய்ச்சி மையம் அருகே வந்தபோது,