பட்டுக்கோட்டை, நவ. 1: இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான மாவட்ட மாநாடு, தஞ்சை பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. இந்த மாநாட்டில் ஜூனியர் பிரிவில் பட்டுக்கோட்டை கோட்டை ரோட்டரி கிளப், பைவ் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகிருதீன், நவீன்சங்கர் ஆகியோர் வழிகாட்டி ஆசிரியர் சரவணக்குமார் துணையுடன் அத்திவெட்டி கோவில்காடுகள் மக்கள் கண்ணோட்டம் என்ற தலைப்பில் கடந்த 4 மாதங்களாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கோவில்காடுகள் பற்றி கள ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கையை மாவட்ட மாநாட்டில் சமர்ப்பித்தனர். இதில் பட்டுக்கோட்டை பைவ் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த இந்த ஆய்வறிக்கை,