வருசநாடு, நவ.1: வருசநாடு அருகே மலைப்பகுதியில் நக்சலைட் நடமாட்டம் உள்ளதா என அதிரடிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே அரசரடி, வெள்ளிமலை, குடிக்காடு, பிளவக்கல் மலை உள்ளிட்ட பகுதிகளில் மர்மநபர்கள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அதிரடிப்படை போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் அப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மர்நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க மலைவாழ் மக்களுக்கு காவல்துறையினர் ரகசிய போன் நம்பர் கொடுத்து வருகின்றனர். ஒத்தவீடு, ஒத்த தோட்டம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.