திருப்பரங்குன்றம், அக்.30: சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர்(23). இவர் மதுரை தெற்குவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் கார்மென்ட்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இந்த கடையில் ஹார்விபட்டியை சேர்ந்த ரோஸ்(17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி துணி வாங்க வந்தார். அப்போது ராஜசேகருடன் பழக்கம் ஏற்பட்டது. ரோஸிடம் ஆசை வார்த்தை கூறி, தஞ்சாவூரில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு ராஜசேகர் அழைத்து சென்றார். அப்போது அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இது குறித்து ரோஸ் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். வாயில் நுரை தள்ளி நடக்க முடியாமல் சாகின்றன கால்நடைத்துறையிடம் மருந்து இல்லையாம்...