மதுரை, அக். 30: கே.புதூர் தொழிற்பேட்டை, சிட்கோ பகுதியை சேர்ந்த மக்கள் சுந்தரராஜ் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் நடராஜனிடம் அளித்த மனுவில், “மதுரை கே.புதூர், ஐடிஐ. தொழிற்பேட்டை வழியாக கே.கே.நகர் செல்லும் சாலையில் நிறைய பள்ளங்கள் உள்ளன. அதேபோல், கற்பகநகர், சிட்கோ வழியாக மாட்டுத்தாவணி, பூ மார்க்கெட்டுக்கு செல்லும் சாலையிலும், கே.புதூர் ஐடிஐ பிஷப் ஹவுஸ், தொழிற்பேட்டை காலனி வழியாக போஸ்ட் ஆபீஸ் செல்லும் சாலையிலும் நிறைய பள்ளங்கள் உள்ளன.