திருவிடைமருதூர், அக். 26: திருப்பனந்தாள் அருகே வீட்டின் பின்கதவை திறந்து 8 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அடுத்த விளந்தகண்பம் கிராமம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராஜசேகர். ஆசாரி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (38). இந்நிலையில் நேற்று வீட்டை பூட்டி விட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மகளை குமட்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கவிதா சென்றார். மருத்துவம் பார்த்து விட்டு வீட்டு கதவை திறந்தார்.