காரியாபட்டி, அக்.26: காரியாபட்டியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. காரியாபட்டி பேருந்து நிலையம் அருகில் காவல்துறை மற்றும் எஸ்.பி.எம் தொண்டு நிறுவனம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் டெங்குவை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முகாமில் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். எஸ்.பி.எம் டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி வரவேற்றார்.