கருங்கல், அக்.26: மார்த்தாண்டம் மேம்பாலம் பொதுமக்கள் பார்வையிட வரும் நவம்பர் 10ம் தேதி மாலை திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.மார்த்தாண்டத்தில் மேம்பால பணிகள் நடைபெறும் பகுதிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காலை பார்வையிட்டார். அப்போது பாலப்பணி தொடங்கும் குழித்துறை பகுதியில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் இருந்தது. இதனிடையே அமைச்சர் வருவதை அறிந்த அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு தண்ணீர் வழிந்தோட நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் பாலவேலை நடைபெறும் பல இடங்களில் சாக்குமூடைகள், இரும்புகம்பிகள் குவிந்த கிடந்ததால் தண்ணீர் வழிந்தோட முடியாமல் நின்றது.இதைகண்ட அமைச்சர் மற்றும் அவருடன் வந்தவர்கள் களத்தில் இறங்கி தண்ணீர் வழிந்தோட நடவடிக்ைக மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்த உஷாரான பாலப்பணி மேற்கொள்ளும் அதிகாரிகள் துரித கதியில் செயல்பட்டு பள்ளங்களில் தேங்கி கிடந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்ைக எடுத்தனர். பின்னர் அமைச்சரிடம் பொதுமக்கள், தாங்கள் நடந்து செல்ல பாதை அமைத்து தர உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு கொண்டனர். இதையடுத்து அமைச்சர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நடந்து செல்ல பாதை அமைத்து கொடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: