திருச்சி, அக்.23: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் இபிஎப் கணக்கை தனியார் ஒப்படைக்கும் முயற்சியை கைவிடக்கோரி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் திருச்சி இபிஎப் அலுவலக மண்டல ஆணையரிடம் மனு கொடுத்தனர். கடலூர் ஏஐடியூசி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் கடலூர் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் தொழிலாளர்கள் திருச்சி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்எல்சியில் பணிபுரியும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் தொடர் சர்வீஸில் நிரந்தர தன்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களின் இபிஎப் கணக்கை தனியார் ஒப்பந்ததாரர்களிடம் வழங்கி தனது முதலாளி-தொழிலாளி என்ற உறவை என்எல்சி நிர்வாகம் முடித்துக் கொண்டது.