வலங்கைமான், அக். 23: வலங்கைமான் அடுத்த பயரி கிராமத்தில் ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண்மை அனுபவ பகிர்வு முகாமில் மீன் வளர்ப்பு தொடர்பாக பகிர்ந்து கொண்டனர். தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா உசிலம்பட்டியில் உள்ள ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண்மை அனுபவ பகிர்வு முகாமில் வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் வலங்கைமான் அடுத்த தெற்குபட்டம் ஊராட்சி பயரி கிராமத்தில் கிருஷ்ணமணி ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீன் பண்ணையில் மீன் வளர்த்தல், பராமரித்தல், விற்பனை செய்தல் பற்றி பகிர்ந்து கொண்டனர். மீன் பண்ணையின் அடி மட்டம் 5 அடியாகவும் அதில் நீர் மட்டம் 3 அடியாகவும் பராமரிக்கப்படுகிறது.