ஜெயங்கொண்டம்,அக்.23: ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாளை (24ம் தேதி) நடைபெற உள்ள அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கங்கை முதல் கடாரம் வரை வெற்றிபெற்றதன் நினைவாக கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாளை (24ம்தேதி) நடைபெற உள்ள அன்னாபிஷேகத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் கணக்க விநாயகருக்கு முதல் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி கோயிலில் யாகம் வளர்த்து அபிஷேகம் ஆராதனை, நடைபெற்றது. இந்த கணக்க விநாயகருக்கு அபிஷேகம் செய்யும் போது விநாயகர் சிலையானது பச்சை நிறமாக மாறிவிடும், பழைய நிலைக்கு திரும்பவும் வர சிறிது நேரமாகும். இந்த விநாயகர் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.