ஓசூர்,அக்.17: ஓசூர் அருகே கழுத்தை அறுத்து பெண்ணை கொல்ல முயன்ற கள்ளக்காதலனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (36). கூலி தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மஞ்சுளாவிற்கும், சூடாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ராஜா என்ற ராஜசேகர் (35) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில், ராஜசேகரை தவிர்த்து, பாகலூர் கோட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (32) என்பவருடன் மஞ்சுளா நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராஜசேகருக்கு, மஞ்சுளா மீது ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று மாலை 3 மணியளவில், பெலத்தூர்-தாளப்பள்ளி சாலையில் மஞ்சுளா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராஜசேகர், மஞ்சுளாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.