ஆவுடையார் கோவில் தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

அறந்தாங்கி, அக்.16: பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி ஆவுடையார் கோவிலில் விவசாயிகள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஆவுடையார் கோவில் பகுதி அனைத்து விவசாயிகள் சார்பில் 2017-18 ம் ஆண்டிற்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி ஆவுடையார் கோவில்  தாசில்தார் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தின் போது பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் கலந்தர் மைதீன், செந்தில்குமார்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: