மானாமதுரை, அக். 16: மானாமதுரை அருகே, தெ.புதுக்கோட்டையில் உள்ள அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 87வது பிறந்த நாள் விழா மற்றும் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் சிவகுருநாதன் தலைமை வகித்து, ‘அப்துல் கலாம் மாணவர்களுக்கு கூறிய கருத்துக்களை எடுத்து கூறினார். மாணவிகள் குணஸ்ரீ, கற்பகஸ்ரீ ஆகியோர் மாணவர்களுக்கு அப்துல்கலாம் கூறிய அறிவுரைகள்,