நத்தம், அக். 16: நத்தத்தில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. தாலுகா அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் பஸ்நிலையம், மூன்றுலாந்தர், மாரியம்மன் கோயில், அவுட்டர்சாலை, கோவில்பட்டி வரை சென்று திரும்பியது. ஊர்வலத்தில் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், சபரிமலையின் புனிதம் காப்போம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.