பாடாலூரில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

பாடாலூர்,அக்.12: ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதவள்ளி, ஆலத்தூர் ஒன்றிய அக்ரோ தலைவர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதிநேர  நியாய விலை கடையை பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்செல்வன் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக பொருள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் பழனிசெல்வன், சார் பதிவாளர்கள் குமார், செல்வராஜ்  உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: