திருப்பூர், அக்.12: அரசு அறிவிக்கும் திட்டப் பணிகளை நிறைவேற்ற நெருக்கடி கொடுப்பதைக் கைவிட்டு, உரிய கால அவகாசம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். இதில் ஊழியர் விரோதப் போக்குடன் செயல்படும் புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சித்துறை திட்ட அலுவலர் சந்தோஷ்குமாரை பணி மாற்றம் செய்யவும், பிறதுறை அலுவலர்கள் மூலம் கள ஆய்வுக்கு உட்படுத்துவதை கைவிடவும்,