ஊட்டி,அக்.12: ஊட்டி மத்திய பஸ் நிலையம் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் மும்முரமாக ஊட்டிக்கு வரும் பெரும்பாலான வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் தான் வருகின்றனர். அதேபோல், கிராமப்புறங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்கும் பல்வேறு தேவைகளுக்காக ஊட்டிக்கு வருகின்றனர். இவர்கள், அனைவரும் மத்திய பஸ் நிலையம் சென்று அங்கிருந்தே வெளியூர் மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்கின்றனர். ஆனால், மத்திய பஸ் நிலையம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இந்த பஸ் நிலையம் சீரமைப்பு பணி துவக்கப்பட்டது. முதற்கட்டமாக பஸ்கள் நிறுத்தும் இடம் பெயர்த்து போடப்பட்டது.