ஒட்டன்சத்திரம், அக். 12: ஒட்டன்த்திரம் பஸ் நிலையத்திற்கு பழநி, கரூர், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி, கேரளா, தேனி, மதுரை, திண்டுக்கல், சென்னை, பெங்களூர் ஆகிய நகரகளுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது, இந்த பஸ்நிலையத்தில் உள்ளூர் வெளியூர்களுக்கு இரவு மற்றும் பகல் நேரங்களில் தினமும் சுமார் 800க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இப்பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி, மாணவிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் இரவு 8 மணிமுதல் காலை 9 மணிவரை பஸ்கள் பஸ்நிலையம் செல்லாமல் மெயின் ரோட்டில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றனர்.