வாலாஜா, அக்.12: கணவரை பிரிந்து வசித்த பெண்ணுடன் போலீஸ்காரர் ஒருவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அப்போது மகளை திருமணம் செய்து வைக்கும்படி போலீஸ்காரர் வற்புறுத்தியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் கல்பனா(34), தனியார் ஷூ கம்பெனி தொழிலாளி. இவரது மகள் மஞ்சு(18) என்பவரும் இதே கம்பெனியில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் கல்பனா வேலைக்கு செல்லவில்லை. மஞ்சு வேலை முடிந்து மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கல்பனா தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கல்பனாவை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கல்பனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வாலாஜா போலீசில் கல்பனா மகள் மஞ்சு புகார் செய்தார். அதில் காவேரிப்பாக்கம் அடுத்த பெரிய கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும், எனது தாய்க்கும் திருமணமானது. 2 மகள்கள் உள்ளோம். எனது, தாய், தந்தைக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் திருமணம் ஆகாத சென்னையில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றும் குமரேசனுக்கும் எனது தாய்க்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களை வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை பகுதியில் தனிக்குடித்தனம் வைத்தார். அப்போது என்னை, தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி போலீஸ்காரர் கடந்த சில மாதங்களாக வற்புறுத்தி வந்தார். அதற்கு எனது தாய் ‘உனக்கு மகள் முறையுள்ள என் மகளை எப்படி திருமணம் செய்வது’ என மறுத்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.