கரூர்,அக்.10: புலியூர் அருகே உடைந்த நிலையில் உள்ள சின்டெக்ஸ் டேங்கினை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் புலியூரில் இருந்து கோயில்பாளையம் செல்லும் வழியில் குளத்துப்பாளையம் பகுதி உள்ளது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. இந்த பகுதி மக்களின் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு தெருமுனையில் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. டேங்க் அமைக்கப்பட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், சில மாதங்களாக டேங்கில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பயன்படுத்தாத நிலையில் வீணாகி செல்கிறது.