வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

திருச்சி, அக்.9: திருச்சியில் வாலிபரிடம் ரூ.3லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருச்சி ஜீவாநகர் கட்டபொம்மன் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமதுதாவர்அலி (30). இவருக்கும், நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த முகமதுஅப்துல் பாசித் (எ) தர்கா சேட் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் முகமதுதாவர்அலி, பெங்களூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் எல்எல்பி பட்டம்பெற தர்கா சேட்டிடம் கடந்த 2016ல் ரூ.3லட்சம் கொடுத்துள்ளார். இதில் காலம் தாழ்த்தி வந்ததால், தான் கொடுத்த பணத்தை முகமது தாவர்அலி திருப்பி கேட்டபோது தர்கா சேட் மிரட்டியுள்ளார். இதுகுறித்து திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்1 கோர்ட்டில் முகமது தாவர்அலி மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் தர்கா சேட் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: