திருப்பூர், செப். 26: திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் குமார் (45). பெயிண்டர். இவருக்கு பழனியம்மாள் (39) என்ற மனைவியும், ராஜேஸ் (18) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வௌியே சென்ற குமார் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள பாறைக்குழியில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.