இளையான்குடி, செப்.25: இளையான்குடி கண்மாய்க்கு வைகை தண்ணீ திறந்துவிட நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளையான்குடி பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது பெரிய கண்மாய். கண்மாய் மூலம் 1300 ஏக்கர் பயன்பெற்று வருகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கண்மாய் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படவில்லை. கருவேலமரக்காடக
மாறியுள்ளது. எனவே கண்மாயில் உள்ள கருலே மரங்களை அகற்ற ேவண்டும். வைகை தண்ணீரை கண்மாய்க்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கடந்த மாதம் விவசாயிகள் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.