ஐவர் கால்பந்து போட்டி

திண்டுக்கல்,  செப். 25:  திண்டுக்கல் செவன் டாலர் கன்சார்டியம் மற்றும் மேட்டுப்பட்டி ஊர்மக்கள் சார்பில் 5ம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடந்த இப்போட்டியில் திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். நாக்அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. இறுதிபோட்டியில் திண்டுக்கல் கேஎப்சி அணி வென்று முதல் பரிசான ரூ.15,005, சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. 2,3ம் இடங்களை பிடித்த மேட்டுப்பட்டி செவன் டாலர் அணி, அனுமந்தராயன் கோட்டை லயோலா கால்பந்து அணிக்கு ரொக்கப்பரிசு, சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.

Related Stories: