தென்காசியில் இன்று நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு

தென்காசி, செப்.25:  தென்காசியில் இன்று (25ம் தேதி) நடைபெறுவதாக இருந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து கோட்டாட்சித்தலைவர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எனது தலைமையில் இன்று (25ம் தேதி) காலை 11 மணிக்கு கோட்டாட்சித்தலைவர் அலுவலகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் இக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்து நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: