அச்சன்புதூர் பகுதியில் நாளை மின்தடை

தென்காசி, செப்.25:  அச்சன்புதூர் பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தென்காசி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அச்சன்புதூர் உபமின்நிலையத்தில் நாளை (26ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: